Web Published by Kaarthik. Powered by Blogger.

நீண்ட நேர இன்பத்துக்கு காமசூத்திரம் கூறும் வழிமுறை

Wednesday, March 31, 2010

தாம்பத்ய உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது.

குரல் நன்றாக இருப்பதற்கு சில விதிமுறைகள் சொல்லப்பட்டுள்ளது. அதாவது,. ஜாதிக்காய், ஏலக்காய், திப்பிலி, வெட்டிவேர், பழைய பழச்செடியின் இலை இவற்றை நசுக்கி ஆணும், பெண்ணும் சாப்பிட்டு வந்தால், இனிமையான குரல் வளம் உண்டாகும். நல்ல குரல் வளம் இருந்தால், ஒருவரை ஒருவர், பேச்சிலேயே கவர்ந்திழுத்து அடிக்கடி கலவியில் ஈடுபட ஏதுவாகும் என்பது இதன் உள் நோக்கமாகும்.
 
உடல் வனப்பு என்பதும், ஒருவரை ஒருவர் கவர மிக முக்கிய அம்சம். ஒரு பெண் எத்தனை தான், வயதில் சிறியவளாக இருந்தாலும், அவளது உடலில் வனப்பு, ஒரு மினுமினுப்பு இல்லையென்றால், ஆணை கவர்ந்திழுப்பது கடினம். எனவே, ஆண், பெண் தங்கள் உடல் அழகைப் பேணிக்காக்க வேண்டியது அவசியம் என்கிறது காமசூத்திரம். அப்போது தான், இருவருக்குள்ளும் நல்ல சுமுகமான உறவு நிலைத்திருக்கும். இதற்கும் ஒரு உபாயம் சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன...?
 
எள், பழம், மஞ்சள், கோரக்கிழங்கு இவற்றை நன்றாக நசுக்கி நெய்யுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்து வந்தால், ஆண்., பெண்ணின் உடல் தங்கம் போல தளதளக்க ஆரம்பிக்குமாம். இன்னும் சில ஆண்களுக்கு ஆண்குறியில் விரைப்புத்தன்மை குறைவாக இருக்கும். இதனால் அவர்களது தாம்பத்ய வாழ்க்கையில் புயல் வீசி குடும்பமே ஆட்டம் கண்டு விடும். அப்படிப்பட்ட ஆண்களின் குறையை நிவர்த்தி செய்யவும் ஒரு பக்குவம் சொல்லப்பட்டிருக்கிறது.
 
அதாவது, எள். வெள்ளரிக்காய், இவற்றை ஒன்றாக அரைத்து ஆட்டுப்பால், தேன் இவற்றுடன் கலந்து தொடர்ந்து 7 நாட்களுக்குச் சாப்பிட்டு வர வேண்டும். அப்படிச் சாப்பிட்டு வந்தால், ஆண்குறியில் நல்ல விரைப்பு உண்டாகும். சுகமான தாம்பத்யம் அமையும். இன்னும் சில ஆண்களுக்கு ஆண்குறி விரைப்பில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஆனால் உடலுறவு கொள்ள ஆரம்பித்த ஒரு சில நிமிடங்களில் விந்து வெளியேறி விடும். இதனால் பெண்ணும் உச்சக்கட்ட இன்பத்தை அடைய முடியாமல், அவர்களது உறவில் விரிசல் ஏற்படும்.
 
இப்படி விந்து உடனேயே வெளியேறாமல் இருக்கவும், காமசூத்திரம் ஒரு வழி கூறுகிறது. அது என்ன?

ஜாதிக்காய், விஷ்ணுகாந்தம், கன்னியாகுமரி வேர் இவற்றை நன்றாக அரைத்து மாத்திரையாகச் செய்து வாயில் அடக்கிக்கொண்டு பெண்ணோடு உடலுறவு கொள்ளும் ஆணுக்கு அவ்வளவு எளிதில் விந்து வெளிவராது,. நீண்ட நேரம் இருவரும் இன்பம் அனுபவிக்க முடியும் என்கிறது காமசூத்திரம்.

0 comments:

Post a Comment

About This Blog

தாம்பத்திய வாழ்க்கை சிறக்க இதோ சில டிப்ஸ்!





எற்கனவே தம்பத்தியத்தின் பல டிப்ஸ் தந்துள்ளேன்.. இதோ மேலும் ஒரு டிப்ஸ்..



மானதாகும்.கணவன்,மனைவிக்குள் சின்ன சின்ன சந்தோஷங்கள் இருந்தாலே வாழ்க்கை மிக சுவாரஸ்யமாக இருக்கும்.



திருமண வாழ்க்கையில் உற்சாகமே இல்லையா? என்னத்த சம்பாதிச்சு, என்னத்த வாழ்ந்து... என்று அடிக்கடி புலம்புகிறீர்களா?கவலையே வேண்டாம். இந்த சின்ன வைத்தியத்தை செய்து பாருங்கள். எல்லா பிரச்சினைகளும் போயே போச்சு!



அது தான் கட்டிப்பிடி வைத்தியம்.சும்மா இறுக்க அணைத்து ஒரு உம்மா கொடுங்கோ.........



கணவன்-மனைவிக்குள் இந்த கட்டிப்பிடி வைத்தியம் இருந்தால் நோ டென்ஷென், நோ ப்ராப்ளம் என்கிறது ஒரு ஆய்வு.



அதாவது ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு தடவையாவது கணவன்-மனைவியர் கட்டிப்பிடிக்க வேண்டுமாம். அவ்வாறு கட்டிப்பிடி வைத்தியம் செய்யும்போது `இச்` மழை பொழிய வேண்டுமாம். அப்போது தான் அந்த வைத்தியத்திற்கு `பவர்` இருக்குமாம்.



இப்படி கட்டிப்பிடி வைத்தியத்தின் பயன்களை அள்ளித்தருகிறது அந்த ஆய்வு.



அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சுமார் 5 ஆயிரம் தம்பதிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. ஆய்வில் பங்கேற்ற தம்பதிகளிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வியே, நீங்கள் எப்போது மகிழ்ச்சியாக, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பது தான்!



எல்லோரும் மளமளவென்று கருத்துக்களை கொட்டினர். சில தம்பதியர் கூறியதை கேட்டு, கேள்வி கேட்டவர்களே கிளுகிளுப்பாகிவிட்டனர். அந்த அளவுக்கு `ஓபனாக` பதில் கூறிவிட்டனர் அந்த தம்பதியினர்.



அனைத்து தம்பதியர்களிடமும் கருத்துகள் கேட்கப்பட்டு, கூட்டிக்கழித்துப் பார்க்கும்போது பல சுவையான தகவல்கள் கிடைத்தன.



1. கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் தினமும் கட்டிப்பிடிக்க வேண்டுமாம். ஒரு நாளைக்கு குறைந்தது 4 தடவையாவது அவ்வாறு செய்ய வேண்டுமாம். விருப்பம் இருந்தால் கணக்கு வழக்கின்றி கட்டிப்பிடிக்கலாமாம். வீட்டில் சும்மா இருக்கும்போது கட்டிப்பிடித்துக் கொண்டே இருந்தால் `போர்` அடித்து விடுமாம். அதனால், வீட்டை விட்டு புறப்படும்போதோ அல்லது வெளியில் இருந்து வீட்டுக்கு வரும்போதே துணையை கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டுமாம்.

2. கட்டிப்பிடி வைத்தியத்தோடு, பொழுதுபோக்கு விஷயங்களிலும் அதிக கவனம் செலுத்த வேண்டுமாம். போவோமா ஊர்கோலம் என்று அடிக்கடி வெளியிடங்களுக்கு ஜோடியாக `விசிட்` அடித்தால் வாழ்க்கையில் இன்னும் கொஞ்சம் `கிக்` இருக்குமாம்.



3. ஒரு மாதத்தில் 7 மாலை நேரங்களில் கணவன்-மனைவியர் ஒன்றாக பொழுதை போக்க வேண்டுமாம். அதில், 2 வேளைகளில் வெளியே டின்னர் சாப்பிட வேண்டுமாம்.



4. மாதத்திற்கு 2 முறை காதல் உணர்வுடன் கணவன்-மனைவி இருவரும் வெளியே செல்ல வேண்டுமாம். அவர்கள் செல்லும் இடம் இயற்கை எழில் மிகுந்த தனிமையான இடமாக இருக்க வேண்டியது அவசியமாம். அந்த இடத்தில் காலாற நடந்து செல்வதுடன், அவ்வப்போது செல்லமாக துணையை கிள்ளி கிச்சுக்கிச்சு மூட்ட வேண்டுமாம்.



5. இப்படி பார்ட் டைமாக மட்டும் வெளியே செல்வது ஒருபுறம் இருந்தாலும், குழந்தைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என எல்லோரையும் ஓரம்கட்டிவிட்டு மாதத்திற்கு ஒரு நாளாவது கணவன்-மனைவி இருவரும் வெளியே ஊர் சுற்ற போக வேண்டுமாம். அப்போது ஓட்டலுக்கு சென்று பிடித்த உணவு அயிட்டங்களை ஒரு வெட்டு வெட்ட வேண்டுமாம். சாப்பிட்டு முடித்ததும், பிடித்த தியேட்டரில் பிடித்த படத்தை பார்க்க வேண்டுமாம்.



6. மேலும், மாதத்திற்கு ஒரு முறை கணவன் தனது மனைவிக்கு ஏதாவது ஒரு கிப்ட் வாங்கிக் கொடுத்து அசத்த வேண்டுமாம். பெரிய அளவில் கிப்ட் கொடுக்க முடியாவிட்டாலும், பூச்செண்டாவது வாங்கிக் கொடுக்க வேண்டுமாம்.



- இப்படி தகவல்களை கொட்டி இருக்கிறார்கள் அந்த தம்பதியர்கள்.



இவ்வாறு வாழ்க்கையை வாழ்ந்தால் திருமண வாழ்க்கையில் பிரச்சினை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அந்த திருமண வாழ்க்கை ஆனந்தமாக இனிக்கும் என்று இறுதியாக தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள், ஆய்வு நடத்தியவர்கள்.



சரி.சரி.கட்டிப்பிடி வைத்தியத்தை ஆரம்பிங்கப்பா....




நம் தளம் பற்றிய கருத்துகள் மற்றும் உங்கள் கதைகள் நம் தலத்தில் ஒலிபரப்பு செய்ய: j.k.vaalu24.malliga@blogger.com என்ற முகவரியில் பதிவு செய்யுங்கள், நன்றி...

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP